FURTHER GOOD NEWS- TRAINING ORDERED ON CBS FINACLE TO P.A.s FROM 09.11.15 TO 14.11.15 AT WCTC, TRICHY IS NOW CANCELLED
திருச்சி மண்டல ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !
தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடும் வண்ணம் WCTC திருச்சியில் 09.11.2015 முதல் 14.11.2015 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த CBS FINACLE TRAINING ரத்து செய்யப் பட்டது. திருச்சி மண்டல PMG அவர்களுக்கு நம் நன்றி. உத்திரவின் நகல் கீழே :-
" In accordance with the orders contained in R.O mail dated 03/11/15 in file no STB/48-1/15/CBS, the CBS Finacle training for Postal Assistants for the period from 09/11/15 to 14/11/15 at WCTC,Tiruchirapalli-1 stands Cancelled."
FIRST LSG LIST FOR POSTAL SIDE RELEASED ; INDUCTION TRAINING AT PTC, MADURAI RESCHEDULED INSTEAD OF 9TH NOVEMBER 2015 DUE TO DEEPAVALI TAKEN INTO ACCOUNT THE REQUEST OF OUR CIRCLE UNION
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் !
LSG பதவி உயர்வுப் பட்டியல்
நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த LSG பதவி உயர்வின் முதல் பட்டியல் அஞ்சல் பகுதிக்கு 2011-12 ஆண்டுக்கானது மாநில அஞ்சல் நிர்வாகத் தால் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதன் மூலம் 70 தோழர்கள் பயனடைவர். அடுத்து 2012-13, 2013-14 இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது .
09.11.2015 PTC மதுரை பயிற்சி வகுப்புகள் ரத்து
மேலும், நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 14.10.2015 கடிதத்தின்
படியான கோரிக்கையை ஏற்று (பார்க்க நம்முடைய வலைத் தளத்தின் 14.10.2015 செய்தியை) தீபாவளிப் பண்டிகையை நம்முடைய தோழர்/ தோழியர்கள் குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டு PTC மதுரையின் அனைத்து பயிற்சி வகுப்புகளும் 09.11.2015 அன்று ரத்து செய்யப்பட்டுTRAINING SESSION ஒரு நாள் (17.11.2015) நீட்டிப்பு செய்யப்பட்டு உத்திரவிடப்பட்டுள்ளது.நமது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு நம்முடைய நன்றி.அஞ்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தோழர்கள்/ தோழியர்களுக்கு தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள் !
ஏற்கனவே SURPLUS LGO CANDIDATES களுக்கு பண்டிகை காலத்தில் போடப்பட்ட பயிற்சி வகுப்பு மாற்றியமைக்கப் பட்டது குறித்து OCT .30 அன்று நம்முடைய மாநில அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் .
MONDAY, NOVEMBER 2, 2015
CHQ LETTER TO SECRETARY POSTS ON NON PERMITTING OF OFFICIALS AWARDED WITH PUNISHMENT OF CENSURE/CONTEMPLATION OF DEPTL. PROCEEDINGS FOR DEPTL EXAMINATIONS
இலாக்கா அடிப்படை விதிகளின் படி , ஒரு ஊழியரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்ற காரணத்தாலோ (CONTEMPLATION ) அல்லது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தாலோ(CHARGE SHEET ISSUED), அல்லது CENSURE வழங்கப் பட்டிருந்தாலோ அவரை இலாக்கா தேர்வு எழுத தடை செய்திட முடியாது. ஆனால் அடிப்படை விதிகளுக்கு மாறாக தற்போது இலாக்கா உத்திரவுப்படி அந்த ஊழியர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவதில்லை.
இது இலாக்கா அடிப்படை விதிகளுக்கு மாறானது என்பதை சுட்டிக் காட்டி நம்முடைய மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று இந்த பிரச்சினையை நம்முடைய அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் படி நம்முடைய அகில இந்திய சங்கம் இந்தப் பிரச்சினையை இலாக்கா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பார்க்க கடிதத்தின் நகலை. மேலும் இந்த பிரச்சினையையும் JCM DC கூட்டத்தில் எடுக்குமாறு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் நமது பொதுச் செயலரை வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment