சென்னை, டெல்லி , கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் லேசான நிலநடுக்கம்
புதுடெல்லி,
டெல்லி கொல்கத்தா, ராஞ்சி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் சென்னையிலும்
லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக
பதிவானதாக கூறப்படுகிறது.வங்க கடலில் ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 30
கீமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. அடையாறு, தி நகர் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி சூளை மேடு, எக்மோர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment